சர்வதேச புத்தகக் கண்காட்சி... சென்னையில் சங்கமிக்கும் உலக எழுத்தாளர்கள்!

x

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். வருகின்ற 18ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்றுள்ளனர். 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், துவக்க விழா நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி ஆகியோரும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்