இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து... லெபனானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா..!

x

இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது. ஒடிசாவில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவும் லெபனானும் மோதின. இதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதி தொடங்கிய உடனேயே இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து 66வது நிமிடத்தில் சாங்கெட் கோல் அடித்தார். லெபனான் தரப்பில் கோல் அடிக்கப்படாத நிலையில், ஆட்ட நேர முடிவில் 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, சாம்பியன் பட்டத்தையும் வசப்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்