வெடித்த உட்கட்சி மோதல்... திரிணாமூல் காங்கிரஸார் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்

x

மேற்கு வங்க மாநிலத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு குழுவினர் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கிக் கொண்ட காட்சி வெளியாகியுள்ளது. தெற்கு 24 பர்கானாசில் உள்ள கேனிங் பகுதியில், பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக திரினாமூல் காங்கிரஸ் கட்சினருக்குள் மோதல் ஏற்பட்டது. இரு குழுவினரும் மாறி மாறி தாக்கிக் கொண்ட நிலையில், அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளையும் வீசியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்