'காதல் திருமணம் செஞ்சது ஒரு குத்தமா?'.. சொந்தக்காரர்களுக்கும் நேர்ந்த கதி.. கதறும் இளைஞர்

x
  • வாணியம்பாடி அருகே மாற்று சாதி பெண்ணை கலப்பு திருமணம் செய்ததால் கிராம மக்கள் அச்சுறுத்தி வருவதாக இளைஞர் ஒருவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன்.
  • இவரின் மகன் சந்தோஷ், வேறு சாதியை சேர்ந்த பெண்ணை 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
  • முதலில் எதிர்ப்பு தெரிவித்த சந்தோஷின் பெற்றோர் பின்னர் சமாதானமாகி கொட்டாவூர் கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.
  • இதனிடையே ஜெகதீசன் மற்றும் அவர்களின் உறவினர்களான 4 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததாக கூறப்படுகிறது.
  • கோயில் பூஜைகளில் கலந்து கொள்ள கூடாது, துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என ஒதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்திருக்கும் நிலையில் ஜெகதீசனின் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும், 4 பேரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
  • இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்