தீவிரமடைந்த கர்நாடக - மராட்டிய பிரச்சினை - கர்நாடக முதல்வர் பரபரப்பு கருத்து

x

எல்லைப் பிரச்சினையை பொறுத்தமட்டில், தங்கள் நிலைபாட்டில் எந்த மாறுபாடும் இல்லை என, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லை பிரச்சனை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், இரு மாநில முதலமைச்சர்களும் தொலைபேசி வாயிலாக உரையாடினர். அப்போது சட்டம், ஒழுங்கை பாதுகாக்க, இரு மாநில அரசுகளும் இணக்கமாக செயல்படுவதாக, ஒப்புக் கொண்டனர். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உடனான உரையாடலுக்கு பின், ட்வீட் செய்துள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, எல்லைப் பிரச்சினை பொறுத்தமட்டில் தங்கள் நிலைபாட்டில் எந்த மாறுபாடும் இல்லை எனவும், பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமாக தீர்வு காண்போம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்