ஆட்டோ டிரைவரை தாக்கிய இன்ஸ்பெக்டர்.. ஸ்டேஷனையே ஸ்தம்பிக்க வைத்த நண்பர்கள்

x

நீலகிரி மாவட்டம் உதகையில், ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஓட்டுநர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

படகு இல்லம் சாலையில், ஆட்டோக்கள் நிறுத்தக் கூடாது என காவல் ஆய்வாளர் கூறிய நிலையில், அதற்கு ஓட்டுநர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வினோத் என்ற ஆட்டோ ஓட்டுநரை, காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தாக்கியதாக தெரிகிறது.

இதை கண்டித்த ஆட்டோ ஓட்டுநர்கள், ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உதகை காவல்துறை துணை கண்காணிப்பாளர் யசோதா, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்டோ ஓட்டுநர்களிடம் உறுதி அளித்தார்.

இதை ஏற்க மறுத்த ஓட்டுநர்கள், உதகையில் இன்று முதல் ஆட்டோக்கள் இயங்காது என, அறிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்