மகனுக்காக ஆசையாய் வாங்கிய சிக்கன் பிரியாணியில் பூரான்...சாப்பிட்ட வேகத்தில் தூக்கி ஓடி வந்த தந்தை

x

கடலூர் அருகே சிக்கன் பிரியாணி பார்சலில் பூரான் கிடந்ததாக கூறி, அதை சாப்பிட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள உணவகத்தில், ராஜா என்பவர் சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவரது 4 வயது மகன் சாப்பிட்ட பிரியாணியில் பூரான் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் உணவகத்தில் சென்று விசாரித்தபோது, நேற்று ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் சாப்பிட்ட நிலையில் யாரும் குற்றச்சாட்டு வைக்கவில்லை என, உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்