சென்னையில் பிரபல ஹோட்டலில் பகீர்.. பசியோடு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி -தீயாய் பரவும் வீடியோ

x

சென்னை, ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்தது.

சென்னை ராயப்பேட்டையில் இயங்கி வரும் பிரபல உணவகத்தில் திருவான்மியூரை சேர்ந்த பாலா என்பவர் மதிய உணவு அருந்த சென்றுள்ளார். அப்போது, பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து உணவக மேலாளரிடம் புகாரளித்துள்ளார். அவர்கள் வேறு உணவு தருகிறோம் எனவும், உணவுக்கு பணம் தர வேண்டாம் எனவும் கூறி சமாதானம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தனது சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்த காட்சியை பாலா தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்