விவசாயிகளுக்கு நடந்த அநியாயம் - உடனடி ஆக்‌ஷன் எடுத்த அதிகாரிகள்

x

தேனி மாவட்டம் கூடலூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடாக வசூலிக்கப்பட்ட பணம் விவசாயிகளிடம் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் கூடலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாகவும், எடையில் முறைகேடு நடப்பதால் மூட்டைக்கு 5 கிலோ வரை இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் முறைகேடு உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், முறைகேடாக வசூலிக்கப்பட்ட 4 லட்சம் ரூபாய் பணம் விவசாயிகளிடம் வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்