காய்ச்சலுக்கு குத்திய மருந்து ஊசி..அடுத்த நொடி குழந்தை உடல் முழுதும் புண் - ஆடிப்போன பெற்றோர் தலையில் விழுந்த இடி

x

பண்ருட்டி அருகே தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பாஸ்கர் மற்றும் ராஜஸ்ரீ. இவர்களது 4 வயது பெண் குழந்தையை காய்ச்சல் காரணமாக கடந்த 13-ஆம் தேதி, காடாம்புலியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் குழந்தைக்கு சிகிச்சைக்காக ஊசி போட்ட சிறிது நேரத்தில், உடலில் புண்கள் உருவாகி பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழந்தையின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்