"தமிழ்நாடு தான் correct -ஆ இருக்கும்..." - இலங்கை அதிபர் ரணில் சொன்ன தகவல்

x

டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு இந்தியாவுடன் பேச்சு வார்த்தையை முன்னெடுக்கத் தயார் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல அவசியமான இணையதள அமைப்புகள் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுகளை முன்னெடுக்கத் தயார் எனவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற இலங்கையில் பயன்பாட்டில் உள்ள மொழிகளே தமிழ்நாட்டிலும் உள்ளதால் பணிகள் எளிதாக இருக்கும் என விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்