மோடியை சந்தித்த பின் சுந்தர் பிச்சை சொன்ன தகவல்

x

கூகுள் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் ஃபின்டெக் மையத்தைத் திறக்க உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்த பிறகு தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமை என்று தெரிவித்த சுந்தர் பிச்சை, இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 81 ஆயிரம் கோடி ரூபாய் கூகுள் முதலீடு செய்வதாகவும், குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் கூகுளின் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்க உள்ளதாகவும் அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்