"2,000 ஆண்டுக்கு முன்னே தொழிற்சாலை.. நம் தமிழ் முன்னோர்களின் சிறப்பு" - அமைச்சர் சொன்ன சுவாரஸ்ய தகவல்

x

விருதுநகர் மாவட்டம், வெம்பகோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மூலம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கு தொழிற்சாலை இருந்தது உறுதியாகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், அமைசர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்கள் மூலம், அப்பகுதியில் சங்கு தொழிற்சாலை இருந்தது தெரிய வருகிறது என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்