இந்தோ-திபெத் பாதுகாப்பு படை தேர்வு..ஓட்டப்போட்டியில் மயங்கி விழுந்த இளைஞர்கள்

x

சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடியில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு, வீரர்களை தேர்வு செய்வதற்காக, நடதப்பட்ட ஓட்ட போட்டியின் போது இருவர் மயங்கி கீழே விழுந்த நிலையில், சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், இருவரும் காலை உணவு எடுத்து கொள்ளாமல், பயிற்சியில் ஈடுபட்டதால் மயக்கமடைந்ததாக தெரிவித்துள்ளனர். இளைஞர்களின் உடம்பில் சில தாதுக்கள் குறைந்ததாவும், சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து சென்றதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்