விண்ணை தொட்ட இந்தியாவின் பெருமை - ராணுவ வீரர்களின் அசாத்திய சாதனை

x

முதல் முறையாக பெங்களூருவில் அணிவகுப்பு மைதானத்தில் ராணுவ தினம் கொண்டாட்டப்பட்டது.

தலைநகர் டெல்லியை தவிர்த்து பெங்களூருவில் உள்ள கோவிந்தசாமி அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் விழாவில், ஆளுநர் தாவர் சந்த் கெலாட் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரலாற்று சிறப்புமிக்க தினத்தில் எம்.இ.ஜி. உள்ளிட்ட 6 படைப்பிரிவுகள், வீரர்கள் மற்றும் ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. நிகழ்வில் துருவ் மற்றும் ருத்ரா ஹெலிகாப்டர் விமானங்களின் சாகங்களும், ராணுவ வாகனங்கள் மற்றும் பிராங்கிகளின் அணிவகுப்புகளும் நடைபெற்றன. நிகழ்வில் பேசிய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, எதிரிகளை எதிர்த்து போரிடும் அளவுக்கு இந்திய ராணுவம் பலம் வாய்ந்ததாக உள்ளது என்றார். ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லை பகுதிகளில் வன்முறை, ஆயுத கடத்தல் உள்ளிட்ட தீவிரவாத செயல்கள் பலமுறை தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்