இந்திய கொடி ஏந்திய இந்தியர்கள் மீது தாக்குதல் - ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்

x

ஆஸ்திரேலியாவில் இந்திய தேசியக் கொடி ஏந்திய இளைஞர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பாஜக மூத்த தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், தேசியக் கொடி ஏந்திய இளைஞர்கள் பலர் காலிஸ்தான் குழுக்களால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மஞ்சிந்தர் சிங் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோயில்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி வைத்த நிலையில் இப்படி சம்பவம் நடந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்