இந்தியப்பெண் லண்டனில் குத்தி கொலை

x

இந்தியாவை சேர்ந்த இளம்பெண் லண்டனில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தேஜஸ்வினி என்ற 27 வயது இளம்பெண் லண்டனில் தங்கி மேற்படிப்பு படித்து வந்தார். அவர் லண்டனின் வெம்ப்லே பகுதியில் உள்ளஅடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து தங்கி உள்ளார். இந்நிலையில் அங்கு அண்மையில் தங்க வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் தேஜஸ்வினியையும், மற்றொரு பெண்ணையும் கத்தியால் குத்தியதாகவும் இதில் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரிட்டன் போலீசார் 3 பேரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்