எல்லையில் வேவு பார்த்த ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய இந்திய வீரர்கள்

x

எல்லையில் வேவு பார்த்த ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய இந்திய வீரர்கள்

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அனுமதியின்றி பொருட்களுடன் பறந்த டிரோனை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பஞ்சாப்பின் அமிர்தசரஸ் பகுதியில் டிரோன் ஒன்று பறந்ததை பார்த்த எல்லை வீரர்கள், உடனடியாக அதை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். கீழே விழுந்த டிரோனின் எடை 12 கிலோ என்றும், அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் இருந்ததாகவும் வீரர்கள் தெரிவித்துள்ளனர். எல்லை பகுதியில் கடந்த 3 நாட்களில் மட்டும் இருமுறை டிரோன் பறந்ததால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்