சீனாவால் கொல்லப்பட்ட இந்திய வீரர்.. இன்று அதே இடத்தில் அவரின் மனைவி - இந்திய ராணுவத்தின் தரமான சம்பவம்

x

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி, ராணுவத்தில் இணைந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டு லடாக் எல்லையிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்தநிலையில் வீர மரணமடைந்தவர்களில் ஒருவரான மத்திய பிரதேசத்தை சேர்ந்த தீபக் சிங் என்பவரின் மனைவி ரேகா சிங், இந்திய ராணுவத்தில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்துள்ள ரேகா சிங், ராணுவ அதிகாரியாக கிழக்கு லடாக்கில் பணியமர்த்தப்பட்டுள்ளார். ராணுவ வீரரான கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி ராணுவத்தில் இணைந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்