காமன்வெல்த்தில் தங்கம் வென்ற இந்திய வீர‌ர்கள் : சொந்த ஊரில் வெடி வெடித்து கொண்டாடிய மக்கள்

x

காமன்வெல்த் ஆண்களுக்கான டிரிபுள் ஜம்ப் போட்டியில், இந்திய வீர‌ர்கள் தங்கம் வென்றதற்கு, கேரளாவில் உள்ள அவர்களது சொந்த ஊரில் பொதுமக்கள் வெடி வெடித்து கொண்டாடினர். எர்ணாகுளத்தை சேர்ந்த எல்டோஸ் பால், கோழிகோட்டை சேர்ந்த அப்துல்லா அபுபக்கர் ஆகியோர் தங்கம் வென்றனர். இதையடுத்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் எர்ணாகுளத்தில் பொதுமக்கள் பேனர் வைத்து, ஊர்வலம் சென்றனர். மேலும், வெடி வெடித்து கொண்டாடி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்