இந்திய சர்க்கஸ் ஜாம்பவான் 'ஜெமினி' உடல் நல்லடக்கம்

x

கேரளாவில் காலமான இந்திய சர்க்கஸ் துறையில் ஜாம்பவான் 'ஜெமினி' சங்கரன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சார்ந்த ஜெமினி சங்கரன், ஜம்போ, ஜெமினி, கிரேட் ராயல் உள்ளிட்ட சர்க்கஸ் நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார். 99 வயதான ஜெமினி சங்கரன், வயது முதிர்வின் காரணமாக நோய் வாய்ப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அரசு மரியாதை உடன் காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க ஜெமினி சங்கரன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்