விரைந்தது இந்திய ராணுவம்..இந்தியாவை தொடர்ந்து உலக நாடுகள் உதவி கரம்

x

துருக்கியின் ஹடேய் நகரில் நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்ட‌டங்கள் சரிந்து விழுந்து கிடக்கும் காட்சிகள், கழுகு பார்வையில் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில், மீட்புப் பணிக்காக இந்திய ராணுவம் சென்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காஷியாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானம், துருக்கியின் அடானா விமான நிலையத்திற்கு சென்றடைந்த‌து. அதில், தேடுதல் பணிக்காக மோப்ப நாய்கள், தேவையான மீட்பு உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்றுள்ளனர். மேலும், ராணுவ மருத்துவமனையில் இருந்து எக்ஸ்ரே எந்திரங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவிக்காக, ராணுவ மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சை நிபனர்கள் உட்பட 89 பேர் கொண்ட மருத்துவ குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்