வங்கதேச தொடர் - காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விலகல்..

x

வங்கதேச தொடர் - காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விலகல்..


வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இருந்து, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இதுகுறித்து பேட்டி அளித்துள்ள இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மருத்துவ அறிக்கையை பொறுத்தே டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா பங்கேற்பது குறித்து கூற முடியும் என தெரிவித்தார். வீரர்களின் காயங்களால் முழுமையான இந்திய அணியை உருவாக்க முடியவில்லை என தெரிவித்த அவர், அடுத்த 10 மாதங்களில் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தி சிறந்த இந்திய அணி தயார் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்