இந்தியா Vs ஆஸி. டெஸ்ட் தொடர் - ராகுல் டிராவிட் பரபரப்பு பேட்டி

x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக, இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9ம் தேதி நாக்பூரில் தொடங்கும் நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில், அணியில் ஒவ்வொருவரும் சிறப்பான நிலையில் இருப்பதாகவும், டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் ஒருமுறை இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் பீல்டிங் முக்கிய அம்சம் என குறிப்பிட்ட அவர், Slip மற்றும் Close fieldingல் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்