டெஸ்ட்டில் பழி தீர்த்தது இந்தியா.. பொட்டி பாம்பாக அடங்கிய நாகினிகள்

x

சட்டோஹ்ரம் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 404 ரன்கள் குவித்தது.

புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், அஸ்வின் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

வங்கதேசம் தங்கள் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்டது.

இதனையடுத்து, 254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் ஆடிய இந்தியா, 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

சுப்மன் கில்லும் புஜாராவும் சதம் விளாசினர்.

பின்னர் 513 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஆடிய வங்கதேசம், போட்டியின் கடைசி நாளான இன்று 324 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் படேல் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றிமூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்