இந்தியா - நியூசி. 3வது டி20 போட்டி - தொடரை வெல்ல இந்தியாவுக்கு 161 ரன்கள் இலக்கு | #INDvsNZ

x

3வது டி20 போட்டியில் வெற்றிபெற இந்தியாவுக்கு நியூசிலாந்து 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

நேப்பியரில் நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஃபின் ஆலன் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த சாப்மேன் 12 ரன்களுக்கு வெளியேறினார். எனினும் கான்வே-கிளன் பிலிப்ஸ் ஜோடி நியூசிலாந்தை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, நியூசிலாந்தின் பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கடைசி ஓவரில் 160 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 161 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி தற்போது ஆடி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்