75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டம்... இலங்கைக்கு பேருந்துகளை பரிசளித்த இந்தியா

x

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் 75-ஆவது ஆண்டை முன்னிட்டு, அந்நாட்டுக்கு இந்திய அரசு 50 பேருந்துகளை வழங்கியுள்ளது.

இலங்கையின் கிராமப்புறங்களில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் நோக்கில் 500 பேருந்துகளை இந்தியா வழங்கவுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, 50 பேருந்துகள் அதிபர் மாளிகையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கிடம் அளிக்கப்பட்டது.

இரண்டு பேருந்துகளை கொடியசைத்து இயக்கிய ரணில் விக்கிரமசிங்க, இந்தியா அளித்த பேருந்துகளை பார்வையிட்டார்.

இலங்கைக்கு அண்மையில் 75 பேருந்துகள் அளிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் 500 பேருந்துகளையும் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்