சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்... கோடிகளில் குவிந்த காணிக்கை - எத்தனை கோடி தெரியுமா?

x

சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்... கோடிகளில் குவிந்த காணிக்கை - எத்தனை கோடி தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை இல்லாத அளவிற்கு மண்டல பூஜை காலத்தில் காணிக்கையாக 72 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தற்போது மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், மண்டல பூஜை காலத்தில் மட்டும் வருவாயாக 228 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெருமளவிலான வருவாய், அரவணை விற்பனை மூலம் கிடைத்துள்ளது. நாளொன்றுக்கு மூன்று லட்சம் டின் வரை அரவணை விற்பனையான நிலையில், இதன் மூலமாக மட்டும் கோயில் நிர்வாகத்திற்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்