ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு

x

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்து காணப்படுகிறது. கடந்த சில நாள்களாக விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி நீர்வரத்து, வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. நீர்வரத்து உயர்ந்துள்ளதை தொடர்ந்து, ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.


Next Story

மேலும் செய்திகள்