தூத்துக்குடியை அலற விட்ட சம்பவம் - 9 பேர் அதிரடி கைது

மீனாட்சி பட்டி கிராமத்தில், இம்மானுவேல் சேகரன், சுந்தரனார் புகைப்படங்கள் இருந்த டிஜிட்டல் பேனர் மீது தீ வைத்து கொளுத்தப்பட்டது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள், பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தது தெரியவந்தது. இதை கண்டித்த மீனாட்சி பட்டி கிராம மக்கள், தீ வைத்த நபர்களை கைது செய்ய கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து, மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் நடத்திய விசாரணையில், இருதரப்பைச் சேர்ந்த ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மீனாட்சி பட்டி கிராம இளைஞர்களுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அணியாபரநல்லூர் இளைஞர்கள் தீ வைத்தது தெரியவந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com