நிலத்தகராறு வழக்கில் நடவடிக்கை எடுக்க லஞ்சம் பெற்ற சம்பவம்..போலீஸ் பேசிய பரபரப்பு ஆடியோ

x

செங்கல்பட்டு அருகே நிலத்தகராறு வழக்கில் நடவடிக்கை எடுக்க 2 லட்ச ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்ற காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பள்ளியை சேர்ந்தவர் தமிழ்மணி. இவர், நிலத்தகராறு காரணமாக தன்னுடைய வீட்டை ஒருவர் ஜேசிபி மூலம் இடித்து தள்ளியதாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் நிலைய எழுத்தர் சண்முகம், வழக்கில் நடவடிக்கை எடுப்பதற்காக தமிழ்மணியிடம் இருந்து 2 லட்ச ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எதிர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல், பணம் கொடுத்த தமிழ்மணியின் மீதே வழக்குபதிவு செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த தமிழ்மணி, காவலரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு பேசிய செல்போன் ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்