மருத்துவக்கல்லூரியில் ராகிங் செய்த சம்பவம்..."பெயர் இல்லாத கடிதம் வந்துள்ளது"

x

பாகாயம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ள ஜீனியர் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களை அரை நிர்வாணத்துடன் விடுதியை சுற்றி வரச் செய்தும், பாலியல் ரீதியாக சில செயல்களை செய்து காண்பிக்க கூறியும் சித்ரவதை செய்துள்ளனர்.

மேலும், அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், முட்டைகளை வீசியும் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், 7 மாணவர்களை அக்கல்லூரியின் ராகிங் தடுப்பு கமிட்டியினர் சஸ்பெண்ட் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது குறித்து விசாரணையில் இறங்கியுள்ள கமிட்டியினர், விசாரணைக்கு பின் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்