சென்னை போலீஸ் முகத்தில் சிகரெட் புகை ஊதிய சம்பவம்.. பிரபல சினிமா தயாரிப்பாளர் மகனிடம் விசாரணை - பரபரப்பு காட்சிகள்

x

சென்னை, கேகே நகரில் உள்ள அரசு மருத்துவமனை அருகே காரில் அமர்ந்து படி சிலர் மது அருந்தி இடையூறு செய்வதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று உதவி ஆய்வாளர் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, கும்பலில் இருந்த இளைஞர் ஒருவர் போலீசாரின் முகத்தில் சிகெரெட் புகையை ஊதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இளைஞரின் காரை பறிமுதல் செய்த போலீசாருக்கு, அந்த இளைஞர் பிரபல சினிமா தயாரிப்பாளரின் மகன் விஷ்னு என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், அந்த இளைஞருக்கு போலீசார் சிலர் உதவி வருவதாக கூறப்படும் நிலையில், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்