தொடர் மழை எதிரொலி...உயிரை பணயம் வைத்து பயணம் - வெள்ளத்தை கடக்கும் பள்ளி பேருந்து

x

திருவள்ளூர் மாவட்டம் பாகசாலை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்று தரைப்பாலத்தில், வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 20 கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர். ஆபத்தை உணராமல், வெள்ளநீர் செல்லக்கூடிய தரைப்பாலத்தில் ஒரு சில வாகனங்கள் செல்வதும், சிறுவர்கள் விளையாடி மகிழ்வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்லவதற்கு தடை விதித்து, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்