மனைவியுடன் தகாத உறவு..ஆத்திரத்தில் கணவரும்,மகனும்... மதுரையை அதிரவைத்த பயங்கர சம்பவம்

x

மதுரை, மேலூர் அருகே தர்மசேனாப்பட்டியில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ உதவியாளர் ராமர். இவர் பக்கத்து ஊரை சேர்ந்த பாட்ஷா என்பவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்தது வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாட்ஷா, தனது மகன் மற்றும் மைத்துனருடன் சேர்ந்து ராமரை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராமரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தலைமறைவாக உள்ள பாட்ஷா, அவரின் மகன் கிருஷ்ணன் மற்றும் மைத்துனர் சரவணனை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்