வேறொருவருடன் தகாத உறவு..? - பல முறை கண்டித்தும் அலட்சியம் - மனைவிக்கு கணவரால் நேர்ந்த பயங்கரம்

x

வேறொருவருடன் தகாத உறவு..? - பல முறை கண்டித்தும் அலட்சியம் - மனைவிக்கு கணவரால் நேர்ந்த பயங்கரம்

போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் - பச்சையம்மாள் தம்பதிக்கு, திருமணம் நடந்து 12 ஆண்டுகள் ஆன நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர்.

பச்சையம்மாளுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு நபருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சுரேஷ் பலமுறைக் கண்டித்தும், பச்சையம்மாள் அலட்சியம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் இருவருக்கும் இடையே நடந்த பிரச்சினையில், கோபமடைந்த பச்சையம்மாள் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கு சென்ற சுரேஷ், மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த அவர், கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.

அதனைத் தொடர்ந்து காவல்நிலையம் சென்று சுரேஷ் சரணடைந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்