தூத்துக்குடி, அரசு உதவிபெறும் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக வழங்கிய பெற்றோர்

x
  • தூத்துக்குடி அருகே அரசு உதவிபெறும் பள்ளிக்கு தேவையான பொருட்களை மாணவர்களின் பெற்றோர் சீர் வரிசையாக வழங்கிய சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.
  • பண்டாரம்பட்டி பகுதியில் சுமார் 100 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
  • இந்த நிலையில், அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை கடந்த ஆறு ஆண்டுகளாக சீர் வரிசையாக வழங்கி வருகின்றனர்.
  • அந்த வகையில் இந்த ஆண்டும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சீராக வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்