24 மாணவிகளிடம் பாலியல் சீண்டல்... சிக்கிய ஆசிரியர் - திருவண்ணாமலையில் அதிர்ச்சி..!

x

திருவண்ணாமலை அடுத்த டி.கல்லேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு விருது விளாங்கினான் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். இவர் பள்ளியில் படிக்கும் 20 க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். இதனடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆசிரியர் லட்சுமணனை போக்சோவின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்