கர்நாடக தேர்தலில் பிரமாண்டம் - பொம்மை யானையில் பவனி வந்த வேட்பாளர்

x

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பிரமாண்டமான பொம்மை யானையின் மீது அமர்ந்து ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் என்றால் வித்தியாசமாக வேட்பு மனு தாக்கல் செய்வது சகஜம்தான்.

ஆனால், ஆனெக்கல் தொகுதியில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் சினப்பா சிக்கஹகடே என்பவர் பிரமாண்டமான ஊர்வலத்தை ஏற்பாடு செய்து, அதில் கடை திறப்பு விழாக்களுக்கு பயன்படுத்தப்படும் பொம்மை யானையை வாகனத்தில் வைத்து அதன் மீது அமர்ந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது சின்னமான யானை சின்னத்தை பிரபலப்படுத்தவே இந்த பிரமாண்டத்தை அவர் அரங்கேற்றியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்