அரசுப்பள்ளியில் மாணவ, மாணவிகள் அட்டகாசம்...அடித்து நொறுக்கப்பட்ட வகுப்பறை...

x

தருமபுரி மாவட்டம் மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் வகுப்பறையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... 11,12ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு முடிந்த பிறகு நேற்று மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜைகள், நாற்காலிகள், மின்விசிறி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்... இதே போன்ற சம்பவம் இப்பள்ளியில் 3வது முறையாக நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வித் துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்