அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்..கர்ப்பிணிக்கு காலாவதியான மாத்திரைகள்...அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

x

அங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மயிலேறிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாதந்திர சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளார். மருத்துவர்கள் பரிசோதித்து மாத்திரை எழுதி கொடுத்துள்ளனர். அதைப்பெற்று அங்குள்ள மாத்திரை கவுண்டரில் மாத்திரை வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அது காலாவதியான மாத்திரை என தெரியவந்தது. இது குறித்து சுகாதார மையத்தில் இருந்த மருத்துவரிடம் கேட்டபோது, தற்காலிகமாக வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சுகாதார மையத்தில் காலாவதியான மாத்திரைகளை விநியோகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்