மின்கம்பி ரூபத்தில் எமன்..ஒரே நேரத்தில் உயிரைவிட்ட கணவன், மனைவி - தஞ்சை அருகே அதிர்ச்சி

x

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூராணி அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து, கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேராவூரணி அடுத்த கலகம் ஊராட்சி மிதியக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த உடையப்பன் - சம்பூரணம் தம்பதி, குடிசை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது வீட்டு வாசலில் சென்ற மின் கம்பி இரவு நேரத்தில் திடீரென அறுந்து விழுந்துள்ளது. அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்க வெளியே வந்த உடையப்பன், மின் கம்பியை மிதித்ததில், அவரை மின்சாரம் தாக்கியது. அலறல் சத்தம் கேடடு வந்த அவரது மனைவி சம்பூரணம், கணவனை காப்பாற்ற முயன்றபோது, அவரையும் மின்சாரம் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதிகள் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்