நகர்மன்ற கூட்டத்தில்... திடீரென தீ குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர்கள்... குமரியில் அதிர்ச்சி...

x

கன்னியாகுமரியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டத்தில், நகரமன்ற தலைவரை கண்டித்து சுயேட்சை பெண் கவுன்சிலர்கள் இருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பத்மநாபபுரம் நகராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் நிதியில் இருந்து பத்மநாபபுரம் நகராட்சிக்கு 4 கோடியே 47 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 4 மற்றும் 13 வது வார்டுகளுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என நகராட்சி தலைவர் சோபனை பேசி கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சுயேட்சை கவுன்சிலர்களான மும்தாஜ் மற்றும் சைபினா தங்களிடம் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.


Next Story

மேலும் செய்திகள்