தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய மழை..!கடலாக மாறிய சாலைகள்..!

x
  • கும்பகோணம் மாநகராட்சி பகுதியில், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. பாணாதுரை, மோதிலால் வீதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
  • காஞ்சிபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஓரிக்கை, செவிலிமேடு, ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கோடை மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மணலூர்பேட்டை, ஆதிதிருவரங்கம், வாணாபுரம், திருப்பாலபந்தல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடியது.
  • உளுந்தூர்பேட்டை, அதன் சுற்றுப்புறங்களில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்