விளையாடும் போதே திடீரென சுருண்டு விழுந்து மதுரை வீரர் பலி.. மரணத்தின் கடைசி நொடி காட்சி..!

x

உதகையில் மூத்தோர்களுக்கான மாநில அளவிலான கூடைபந்து போட்டியில், மதுரையைச் சேர்ந்த வீரர், விளையாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உதகையில் மாஸ்டர் டிராபி என்ற பெயரில் மூத்தோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில், நீலகிரி, கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மதியம், 50 வயது முதல் 60 வயதினருக்கான பிரிவில், கோவை அணி வீரர்களும், மதுரை அணி வீரர்களும் விளையாடினார்கள். அப்போது, மதுரை அணியை சேர்ந்த நேரு ராஜன் என்ற வீரர் திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து போட்டிகள் ரத்து செய்யபட்டு, அவரது உடல் பிரேத பரிசோதனைகாக உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்