திருப்பதியில் ஒரே நாளில் கோடிகளில் கொட்டிய உண்டியல் காணிக்கை..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தரிசனத்திற்காக கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, நேற்று ஒரே நாளில் 69 ஆயிரத்து 211 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக மட்டும் 5 கோடியே 11 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story
