ஏடிஎம்-மில் அப்பாவி மூதாட்டியை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்த இளைஞர்...அடுத்த நொடி மகனுக்கு சென்ற எஸ்.எம்.எஸ் - நெல்லையில் பரபரப்பு

x
  • நெல்லை அருகே ஏடிஎம்மில் பணம் எடுத்து தரக்கோரி ஏடிஎம் கார்டை கொடுத்த மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் கொள்ளையடித்து சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் டெங்கி ஜெயராணி. இவர் தனது மகனின் ஏடிஎம் கார்டை எடுத்துக் கொண்டு ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
  • அப்போது, ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால், அங்கிருந்த இளைஞர் ஒருவரிடம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி மூதாட்டி கேட்டிருக்கிறார்.
  • இந்நிலையில், மூதாட்டி கொடுத்த கார்டில் பணம் இல்லை எனக்கூறி வேறொரு போலி ஏடிஎம் கார்டை கொடுத்து திருப்பி அனுப்பிய இளைஞர், மூதாட்டி சென்றவுடன் அவரது கார்டில் இருந்து 9 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்து தப்பியுள்ளார்.
  • இதனிடையே, மூதாட்டியுடைய மகனின் செல்போனுக்கு பணம் எடுக்கப்பட்ட செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது தாய் ஏமாற்றப்பட்டதை அறிந்து போலிசில் புகாரளித்துள்ளார்.
  • இதனடிப்படையில், விசாரணை நடத்தி வரும் போலீசார், ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் இளைஞரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்