"நெல்லை மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில்.." - RTI-யில் வெளியான ஷாக் தகவல்

x

நெல்லை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பொருத்தப்படவில்லை என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பாண்டியராஜன் என்பவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டிய நிலையில், கால தாமதமாக காவல்துறை இதற்கான பதிலை வழங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உட்பட 37 காவல் நிலையங்களில் சுமார் 213 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வெறும் மூன்று கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் பொருத்தப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்