மதுரையில் -தனியார் பேருந்துகளில் கூம்பு வடிவ ஹாரன்கள் அகற்றம்.

x

மதுரையில் -தனியார் பேருந்துகளில் கூம்பு வடிவ ஹாரன்கள் அகற்றம்.மதுரையில் அதிக ஒலி எழுப்பும் கூம்பு வடிவ ஹாரன்களை பயன்படுத்தி வந்த 6 தனியார் பேருந்துகளில் இருந்த ஹாரன்களை போலீசார் அகற்றினர். மேலூரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தனியார் பேருந்துகள் கூம்பு வடிவ ஹாரன்களை பயன்படுத்தி வருவதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதனடிப்படையில், மேலூர் பேருந்து நிலையம் முன்பு அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், கூம்பு வடிவ ஹாரன்களை பயன்படுத்திய 6 தனியார் பேருந்துகளில் இருந்து ஹாரன்களை அகற்றினர். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என கூறி பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீசார் எச்ச்சரித்து அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்