மாமியார் மருமகன் வீட்டில் 210 பவுன் அதிரடி சோதனை...பரமக்குடியில் பரபரப்பு

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அகஸ்டீன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக

வேலை பார்த்து இருக்கிறார். அப்போது, தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக அவர் மீது சென்னை மத்திய குற்றபிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பரமக்குடியில் உள்ள அகஸ்டின் வீடு மற்றும் மேலக்காவனூரில் அமைந்துள்ள அவரது மாமியார் ஜெயராணியின் வீட்டிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயராணியின் வீட்டில் இருந்த 200 சவரன் தங்க நகை, அகஸ்டின் வீட்டில் 2 லட்சம் ரூபாய் மற்றும் 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார்,தலைமறைவாக உள்ள அகஸ்டினை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்